ஞாயிறு, 8 மே, 2016

கேட்டதில் பிடித்தது

 நான் கேட்டதில், எனக்கு மிகவும் பிடித்தது:

50 வயதை கடந்த ஒரு ஆதர்ஷ தம்பதியரின் உரையாடல்,
கணவர்: அதான் நம் பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணமாகி பேரப்பிள்ளைகளாம் பாத்தாச்சே, பின்ன இன்னும் ஏன் நம்ம பிள்ளைகள குழந்தைகள் மாதிரி நடத்துற, மனசளவுல இன்னும் அவுங்கள இடுப்புல தூக்கிவச்சு குழந்தையாட்டம் பாத்துகிட்டுறுக்குற, போதும் அவுங்கள இறக்கி விடு.!

மனைவி: ஏங்க, நான் இன்னும் என் குழந்தைகளுக்கும் எனக்குமான தொப்புள்கொடியே  கத்தரிக்கப்படவில்லைன்னு நினைச்சிட்டுருக்கேன் நீங்க என்னடானா............ போங்க.!