சனி, 13 ஆகஸ்ட், 2016

நீயேதான்

நீயேதான்:

எனக்குள்ளும் காதல் உள்ளதென்று
எனக்கே உணர்த்தியவளும் நீதான்,

எனக்குள் கொட்டிக்கிடக்கும் கவிதைகளை
வெளிக்கொணர்ந்தவளும் நீதான்,


இரவின் வெப்பத்தையும் பகலின் குளுமையையும்
ரசிக்கச்செய்தவளும் நீதான்,

இதுதான் காதலா அல்லது இதுவும் காதலா
என்று புலம்பச்செய்தவளும் நீதான்,

கடைசிவரை அந்த 'நீதான்' என்பது யாரென்று
என்னிடம் சொல்லாமல் சென்றவளும் நீயேதான்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக