வியாழன், 4 ஆகஸ்ட், 2016

எனது கதை

அறுவடையும் ஆறுவடையும்:

       ஒரு கிராமத்தில் ''விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம்'' நடந்தது. அங்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்களது குறைகளை கொட்டி தீர்த்தனர். ஒருவர் அறுவடைக்கு முன்னமே போதிய மழையில்லாமல் பயிர் கருகி விட்டதென்றும், மற்றொருவர் வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியில்லையென்றும், இன்னுமொருவர் பருவநிலை மாற்றத்தால் விளைச்சலுக்கு சந்தையில் போதிய வருமானமில்லை நஷ்டமே மிஞ்சியதென்றும் ஒவ்வொருவராக குறைகளை கூறிக்கொண்டிருந்தனர். மேலும் மனுக்களையும் கொடுத்துவிட்டு தங்களது குறைகள் தீர்க்கப்பட்டு விடுமென நம்பிவந்துவிட்டனர்.

       அடுத்தநாள் காலை நாளிதழில், ''நேற்று நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில் விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட்டது விவசாயிகள் மகிழ்ச்சி" என்று அச்சாகியிருந்தது. ஆனால் உண்மையில் நேற்று தீர்ந்தது விவசாயிகளின் குறைகளல்ல, அதிகாரிகளுக்காக பக்கத்து கடையில் வாங்கிவைத்திருந்த ஆறு வடைகள் மட்டுமே. மேலும் அவர்களது மனுக்கள்கூட வடையினது எண்ணெய்யை பிழிய உதவியதே தவிர வேறொன்றுக்கும் உதவவில்லை. அடுத்ததாக அந்த அதிகாரிகள் உங்கள் ஊருக்கு வந்தாலும் வரலாம், எதற்கும் ஒரு ஆறு வடைகள் வாங்கி வைத்து விடுங்கள் அவர்கள் பாவம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக