வியாழன், 1 டிசம்பர், 2016

எனது கவிதை

அவமானமே அனுபவமாய்,
அழுகையே ஆறுதலாய்,
தோல்வியே தோழனாய்,
நிந்தையே நிரந்தரமாய்,
துக்கமே தூக்கமாய்,
கவலையே கனவாய்,
வேதனையே வழித்துணையாய்,
போராட்டமே பெரும்ஓட்டமாய்,
அமைவது ஏனோ?!



கனவொன்று காணப்படாமலேயே
            கலைந்து போகிறது,
வாய்ப்பொன்று வழங்கப்படாமலேயே
            தொலைந்து போகிறது,
அதிர்ஷ்டம்கூட என்னைவிட்டு
            அலைந்து போகிறது,
என் முயற்சிகள்கூட ஒவ்வொன்றாய்
            குலைந்து போகிறது.!

குறிப்பு:-
               தோல்விகளிலிருந்து பிறந்ததாயினும், தோல்வியிலும்கூட ஏதாவதொரு ஆக்கபூர்வமான முடிவு கிடைக்குமென எனக்கே உணர்த்திய என் தோல்விகளின் முடிவிலிருந்து பிறந்த என் தன்னம்பிக்கைக் கவிதை இது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக