வெள்ளி, 1 செப்டம்பர், 2017

குட்டிக்குளியல்

மழை பொய்த்துப் போகிறது,
மலை விலகிப் போகிறது,
மழலையினிடத்தில் நாமும் கொஞ்சம் தோற்றுதான் போகிறோம்.!

ஆனந்தக்குளியலிடும் அழகான அற்புதமே,
உந்தன் பிஞ்சுமேனியில்பட்டு நன்னீ்ரும் பன்னீராகிறதே.!

மழைதான் தேவையா என்று நினைக்க;
மழலை தேவதையே உன்னை நனைக்க.?!


குதுகாலம் கொப்பளிக்கும் குழந்தையிடம்,
ஆர்ப்பரிக்கும் கோவம்கூட மண்டியிடும்.!


தன்னை மறந்து
தாயின் அரவணைப்பில்
திளைக்கும் மகிழ்ச்சிக்குமுன்;
தீமையே வந்தாலும்
துயரமே தந்தாலும்
தூவானம் போல்
தென்றலாய் தாயும்
தேவதைபோல் சேயும்,
தைரியமாகவேதான்
தொட்டுப்பார்க்கத்தான்
தோன்றுகிறதோ மேகத்தை.!