செவ்வாய், 19 டிசம்பர், 2017

எனது விகற்பாற்கவி (PALINDROME) கவிதை

'விகற்பாற்கவி' என்பது இடமிருந்து வலமாக படித்தாலும் வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே மாதிரி இருப்பது. உதாரணத்திற்கு தாத்தா, பாப்பா, மாமா, காக்கா, விகடகவி, Etc. 
நானும் அவ்வாறான முயற்சியில் எனக்குத்தெரிந்த வகையில் கவிதை என்கிற பெயரில் ஒன்றை இயற்றியுள்ளேன்.


முன்குறிப்பு:
Palindrome என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாகிய 'விகற்பாற்கவி' என்னும் இந்தச் சொல்லே அதன் பொருளை தருகின்ற சிறப்பு நம் தமிழுக்கு மட்டுமே உண்டு.!
(சொல்லிலேயும் நாம் கலைவண்ணம் கண்டோம்)


>> வா நோவா, <<
>> சேர அரசே, <<
>> கானகா, <<
>> வானவா.! <<


>> மேளதாளமே, <<
>> மேகராகமே, <<
>> மோகமேகமோ, <<
>> மேலுமேலுமே.! <<


>> தேமுதே <<
>> தேடுதே <<
>> தேறுதே <<
>> தேயுதே.! <<


>> வைர இரவை, <<
>> தைத்த விதத்தை; <<
>> துழாவி, விழாது <<
>> மேகமே.! <<


>> மாதமா, <<
>> மாயமா, <<
>> மாறுமா, <<
>> மாயுமா? <<


>> மோகமோ, <<
>> மோனமோ, <<
>> மோளமோ, <<
>> மோதுமோ? <<


>> நீ, <<
>> வினவி <<
>> கற்க <<
>> தோணுதோ? <<


>> தீ <<
>> தந்த <<
>> பூ, <<
>> வாழவா? <<


பின்குறிப்பு:
நான் உருவாக்கிய விகற்பாற்கவி வார்த்தைகள், இவைகளை கவிதையில் பயன்படுத்த முடியவில்லை மேலும் எனக்கு தெரியவில்லை.


துருவி தழுவி, விழுத விருது.
திருகு துருவ, வருது குருதி.
மேயுமே சுப பசு மேயுமே
துவாரக கரவாது.
வைத விதவை.
வார வரவா.

1 கருத்து: